பொல்லாத பூமி பாடல் வரிகள் தமிழில் திரைப்படம் அசுரன்

பாடல் - பொல்லாத பூமி 
திரைப்படம் - அசுரன்
பாடியவர்கள் - தனுஷ், G.V.பிரகாஷ் குமார், கென் கருணாஸ், டி ஜே
பாடலாசிரியர் - K.ஏகாதேசி 
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்

பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு
வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து (2)
ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே
ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு
யார் மேல யார் கீழ
போடாத ரூலு
போராட எண்ணாட்டி மாறாதே நாளு
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும்
ஆக மாட்டேன் மூச்சே போனாலும்
ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
கட்டாரியும் கோடாளியும்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ
பச்சோந்தியா வாழாத
உன் தன்மானம் ஊர காக்காதோ
மண்வாசனை உன்மேலத்தான்
மக்காம வீசும் குடிகொண்டு
உன் பேருல பத்தூரையும்
பட்டாவ போடும் கவர்ன்மெண்ட்
ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்
கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து (2)

கருத்துரையிடுக

0 கருத்துகள்